Advertisment

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யக் கூடாது : நீதிபதி கிருபாகரன் கேள்வி

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court

chennai high court

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வருவது குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை பம்மலில் உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து ஓராண்டு கடந்த பிறகும் தாத்தாவின் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து பத்திரப் பதிவு செய்யாமல் இருப்பதாகவும், பத்திரப்பதிவை முடித்து பத்திரங்களை வழங்க பம்மல் சார் பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஆலந்தூரை சேர்ந்த பூபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, சார் பதிவாளர் அலுவலகங்களில் எத்தனை லஞ்ச ஓழிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன என்பது உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற 77 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடு இந்தியா என்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதிக அளவில் அரசு அலுவலகங்களில் தான் ஊழல் நடைபெறுவதாக தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையை எதிர் மனுதராக சேர்ப்பதாகவும், உத்தரவிட்டார். மேலும் லஞ்ச ஒழிப்பு துறை இந்த வழக்கில் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

1. லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏன் புதிய சட்டம் இயற்றகூடாத?

2. புதிய சட்டம் கொண்டு வரும்வரை ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கூடாதா?

3. கடந்த 10 ஆண்டுகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன?

4.எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

5.எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

6.எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது??

7. எத்தனை வழக்குகள் விசாரிக்கபட்டு வருகின்றது.

8. எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

9. எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர். எத்தனை பேர் விடுதலை பெற்றுள்ளனர்.

10.அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல் 5 அரசு துறைகள் என்ன ??

11. லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் என்ன??

12. சோதனையின் போது நவீன தொழில்நுட்பகள் பயன்படுத்தப்படுகின்றவா??

13. லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறா? என்பது உள்ளிட்ட 15 கேள்விகளுக்கு தமிழக அரசும், லஞ்ச ஒழிப்பு துறையும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment