ரகுமான், கோவை
Kerala floods - Wild elephant drowned video Tamil News: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காற்றாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் அருகில் பெருங்கள்குத்து என்ற அனை திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த யானை தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கு இங்கும் சுற்றித் தெரிந்தது. தற்போது கேரளா வனத்துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கு ஆயத்த பணியைச் செய்து வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil