Advertisment

சோளக் காட்டுக்குள் புகுந்த 7 காட்டு யானைகள்: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு விரட்டிய வனத்துறை

கோவை பச்சாபாளையம் பகுதியில் சோளக் காட்டுக்குள் 2 குட்டிகளுடன் முகாமிட்டிருந்த 7 காட்டு யானைகளை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

author-image
WebDesk
New Update
சோளக் காட்டுக்குள் புகுந்த 7 காட்டு யானைகள்: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு விரட்டிய வனத்துறை

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளில் பேரூர் பகுதியும் ஒன்று. இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் யானைகள் உணவு தேடி, தண்ணீர் தேடி உலா வரும். பொதுமக்கள் வனத்துறை உதவியுடன் காட்டுக்குள் விரட்டுவர். இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பச்சாபாளையம் அருகே உள்ள சோளக் காட்டில் 7 காட்டு யானைகள் நுழைந்தன. பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment
publive-image

2 குட்டிகளுடன் யானைகள் இருந்ததால் அவை விரட்டும் போது ஆக்ரோஷம் அடையாமல் இருக்க வனத்துறையினர் சற்று பொறுமை காத்தனர். வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தும் அவை அங்கேயே இருந்தன. இதையடுத்து குடியிருப்பு பகுதிக்குள் யானை போகாத வகையில் வனத்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

publive-image

பட்டாசுகள் வெடித்தும், வித்தியாசமான சப்தம் எழுப்பியும் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போக்கு காட்டிய யானைகள் மாலை 6.30 மணி அளவில்

வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. நீண்ட தூரம் வெளிச்சம் கொடுக்கும் டார்ச்சர் பயன்படுத்தி யானைகளுக்கு தடம் காண்பித்து வனத்துறையினர் விரட்டினர்.

செய்தி : பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment