Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுமா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் ஜூலை 2 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுமா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் ஜூலை 2 ஆம் தேதி தள்ளிவைப்பு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகள், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீதான 200க்கும் மேற்பட்ட வழக்குகளை உள்ளூர் போலீசாரே விசாரிப்பது தவறானது. துப்பாக்கி சூடு வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் தான், மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். மாநில போலீசார் மீது குற்றம் சாட்டப்படுவதால் இந்த வழக்குகளை அவர்கள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் வழக்கை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் நிலுவையில் உள்ளது. மேலும் மதுரையில் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் கோரிக்கையை ஒன்று தான் சிபிஐ விசாரணை, சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தான், மேலும் இரண்டு நீதிமன்றம் நிலுவையில் உள்ளதால் வழக்குகளிக்கு பதில் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுகின்றது. மேலும் சென்னையில் இருந்து தான் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. எனவே தேவையற்ற கால விறையத்தை தவிர்க்கவும் உத்தரவுகளை பின்பற்றுவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள் தீர்க்க சென்னையில் வழக்குகளை விசாரிக்க வேண்டும். அல்லது இங்கு உள்ள வழக்குகளை மதுரை கிளைக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு நீதிமன்றத்தில் ஒரு நிகழ்வு தொடர்பாக வழக்கு விசாரிக்கபடுகின்றது எனவே அதில் உள்ள நடைபெற்று பிரச்சனைகளை தீர்க்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் மதுரையில் உள்ள வழக்குகளை மாற்றுவது தொடர்பாக அங்கு வழக்கு தொடர்ந்த மனுதரார்கள் ஒப்புதல் அல்லது விளக்கம் பெற வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள துப்பாக்கி சூடு சம்மந்தமான அனைத்து மனுகளையும் வரும் இரண்டாம் தேதி தள்ளிவைப்பதாகவும். மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மாற்றுவது தொடர்பாக ஜூலை இரண்டாம் தேதி முடிவு செய்யலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment