Advertisment

தமிழகத்தில் அதிகமாகும் இளைஞர்கள் மற்றும் இணை நோய் இல்லாதவர்கள் உயிரிழப்பு

In tamil nadu youngster death rate high due to corona: இணை நோய்கள் இல்லாத, 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் இப்போது தமிழகத்தில் கொரோனாவால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொது சுகாதார இயக்குனரக தரவுகள் கூறுகின்றன.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் அதிகமாகும் இளைஞர்கள் மற்றும் இணை நோய் இல்லாதவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இணை நோய்கள் இல்லாத, 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் இப்போது தமிழகத்தில் கொரோனாவால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொது சுகாதார இயக்குனரக தரவுகள் கூறுகின்றன.

Advertisment

ஆங்கில ஊடகம் வெளியிட்ட கட்டுரையின் படி, ஜனவரி 10 அன்று, தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,222 ஐ எட்டியபோது, ​​அதில் சுமார் 18% (2,084) பேர் எந்தவிதமான இணை நோய்களும் இல்லாதவர்கள். ஆனால் மே 9 அன்று கொரோனாவால் நிகழ்ந்த 15,648 இறப்புகளில் 6063 பேர் (39%) இணை நோய்கள் இல்லாதவர்கள். அதேநேரம் செவ்வாய்க்கிழமை மட்டும், மாநிலத்தில் இறந்த 298 பேரில் 78 பேருக்கு இணை நோய்கள் இல்லை.

இருப்பினும், முழுமையாக எண்ணிக்கையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களிடையே இறப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களில், ஐ.சி.யுகளில் அதிகமான இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலர் இறந்து விட்டனர்.

செவ்வாயன்று, இறந்த 298 பேரில் ஐந்து பேர் 20 வயது உடையவர்கள், அவர்களுக்கு எந்தவிதமான இணை நோய்களும் இல்லை. 30 வயதிற்குட்பட்டவர்களில், 30 வயது ஆணும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 37 வயது பெண்ணும், உயர் இரத்த அழுத்தம் கொண்ட 38 வயது ஆணும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு ஆணும் இருந்தனர். 40 வயதிற்குட்பட்ட 48 பேரில் குறைந்தது 21 பேருக்கு இணை நோய்கள் இல்லை.

ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில், இறப்புகளின் வளர்ச்சி விகிதம் 31-40 வயதுக்குட்பட்டவர்களிடையே மிக அதிகமாக (37%) இருந்தது. ஜனவரி 10 ஆம் தேதி, 31-40  வயதிற்குட்பட்டவர்களில் 456 பேரும், மே 9ஆம் தேதி அன்று 623 பேரும் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில், 20-30 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகள் 142 முதல் 187 வரை, அதாவது 31% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த இறப்புகள் 12,222 லிருந்து 15,648 ஆக (28%) அதிகரித்துள்ளது. அப்போதிருந்து, 20 வயதில் 8 பேரும், 30 வயதில் 35 பேரும் இறந்துள்ளனர்.

வல்லுநர்கள் கூறுகையில், “தொற்று பாதித்த உடனே மருத்துவமனைகளை அணுகும் மக்களில் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பைக் குறைக்க முடிந்தது”. மூத்த குடிமக்களுடன் 40 வயதிற்குட்பட்டவர்களும் ஐ.சி.யுவில் உள்ளனர், ஆனால் இளைஞர் மற்றும் ஆரோக்கியமான மக்கள் ஏன் இறக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. “இதற்கு இதுவரை எங்களுக்கு எந்த அறிவியல் காரணங்களும் இல்லை. இப்போது நாம் காணும் இளைஞர்களின் சுயவிவரம் வாழ்க்கை முறைக் கோளாறுகள் அதிக ஆபத்துள்ள ஒரு சிறந்த சமூக பொருளாதார பின்னணியிலிருந்து வந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது, ”என்று கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Corona Corona Dead
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment