Advertisment

உயர் ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த இளைஞர் கைது

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயர் ரக போதைப் பொருளான மெட்டாபெத்தமைன் மற்றும் கஞ்சா பொட்டாலங்கள் வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
உயர் ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த இளைஞர் கைது

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டையும், நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழித்து, போதை பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் விதமாக மாவட்ட காவல் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisment

அதன் அடிப்படையில் கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அவரிடம் உயர் ரக போதைப் பொருளான மெட்டாபெத்தமைன் மற்றும் கஞ்சா பொட்டாலங்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் கொண்டையம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5.25 கிராம் எடையுள்ள மெத்தபெத்தமைன் மற்றும் 1/2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment