மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் மொபைல் பாஸ்போர்ட் சேவா என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சொந்த ஊர்களில் இல்லாமல் வெளியூர்களில் வசிப்பவர்கள் மிக விரைவாக தங்களுடைய பாஸ்போர்ட்டினை பெற்றிட வழிவகை செய்கின்ற செயலி இது. உங்களின் சொந்த ஊர் சென்னையாக இருக்கலாம், ஆனால் நீங்கள் டெல்லியில் வேலை செய்துவருகின்றீர்கள் என்றாலும், உங்களுடைய பழைய இருப்பிடச் சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்பித்து பாஸ்போர்ட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கென உருவாக்கப்பட்ட செயலியினை தற்போது 2 நாட்களில் ஒரு மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டிருக்கின்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார். இந்த செயலியின் மூலம் நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம், பணம் செலுத்தலாம், மற்றும் பாஸ்போர்ட்டினைப் பெற்றுக் கொள்ள சரியான நேரத்தினை புக் செய்து கொள்ளலாம். இந்த செயலினை மூலம் பாஸ்போர்ட் பெற கம்ப்யூட்டர் பிரிண்ட்டர் என எதையும் நீங்கள் நாட வேண்டாம்.
இந்த செயலியின் மூலமாக ரீஜினல் பாஸ்போர்ட் மையம், பாஸ்போர்ட் சேவா கேந்திரா, போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா போன்ற அலுவலகங்களை நீங்கள் மிக எளிதில் அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.