தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் பெறுபவர்கள் என அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களாக மின் வாரியப் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் ஆதார் அட்டை, மின் பயன்பாட்டு அட்டை பயன்படுத்தி இணைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.68 கோடி மின் நுகர்வோர் இருக்கும் நிலையில், 51 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஆன்லைனில் ஆதார் இணைப்பதில் பல சிரமங்கள் உள்ளதாக பயனர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற முகவரியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது.
பயனர்கள் சந்தேகத்திற்கும் அவ்வப்போது மின்வாரியம் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர்கள் இறந்துவிட்டனர். ஆதார் இணைப்பது எப்படி என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். அப்படி இருக்கையில், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், ஆதார் இணைக்கலாம். புதிதாக யார் பெயரில் மின் இணைப்பு மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். அவரது ஆதார் எண் பயன்படுத்தி இணைக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/