இந்த வாரம் லிங்க்டின் இணைய தளத்தில் காணப்பட்ட மிக முக்கியமான ரெக்ரூட்மெண்ட் ஆப்பிள் நிறுவனத்துடையது தான். கூர்கானை மையமாக கொண்டு இயங்க இருக்கும் அலுவலகத்திற்கு பிசினஸ் டெவலப்மெண்ட் மேனஜரை தேடிவருகிறது ஆப்பிள் நிறுவனம். அதற்கான ரெக்ரூட்மெண்ட்டினை லிங்க்டினில் பதிவிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் ப்ரோடக்டுகளுக்கு எப்போதுமே இந்தியாவில் மதிப்பு அதிகம்.ஆனாலும் அதிகப்படியான விலை காரணமாக ஆப்பிள் ப்ரோடக்டுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். அதனால் அதிகமான வாடிக்கையாளர்களை கவர விரும்புகிறது ஆப்பிள். இது தொடர்பாக இந்திய அலுவலகத்தின் செயல்பாடுகளில் அதிக கவனத்தினை செலுத்தி வருகிறது ஆப்பிள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிசினஸ் டெவலப்மெண்ட் மேனஜர்
நிதி நிறுவனங்கள், காப்புரிமம் நிறுவனங்கள், கரியர்ஸ், டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், ரீசெல்லர்ஸ் ஆகியோருடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த ரெக்ரூட்மெண்ட்டை உருவாக்கியுள்ளது ஆப்பிள்.
இதற்கு அப்ளை செய்யும் நபர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் இண்டெர்நெல் மற்றும் எக்ஸ்டெர்நெல் பார்ட்னெர்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஆப்பிள்.
உலகின் முதல் ட்ரில்லியன் டாலர்களை வருமானமாக பெரும் கம்பெனியாக ஆப்பிள் இருந்தாலும் இந்தியாவின் ஆப்பிள் போனின் ஷேர் என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ப்ரீமியம் மாடல் போன்களிலும் கூட ஒன்பிளஸ் முதல் இடம் வகிக்கிறது. சாம்சங் மற்றும் ஐபோன்கள் தேர்ந்தெடுப்பவர்கள் எண்ணிக்கை இங்கு குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அலுவலக மாற்றங்களில் ஈடுபட்டு வரும் ஆப்பிள் நிறுவனம்
இந்தியாவில் இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வருடம் ஓவர்சீ அப்பரேசன்ஸ் தலைமை பதவி இந்தியர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. அதே போல் மார்க்கெட்டிங் டேரக்டராக பூனம் கௌலை ஜூன் மாதம் நியமித்தது ஆப்பிள் நிறுவனம்.