ஆப்பிள் மேக்புக் ஏர் மலிவு விலையில் இந்த வருட இறுதிக்குள் வெளிவரலாம் என்று டிஜிடைம்ஸ் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. தைவான் நாட்டு குவாண்ட்டா நிறுவனம் இந்த லேப்டாப்களை தயாரிக்க உள்ளதாக அச்செய்தியில் தகவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த வருடத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த லேப்டாப்கள் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் மேக்புக் ஏர் 2 சிறப்பம்சங்கள்
டிஎஃப் இண்டெர்நேசனல் செக்யூரிட்டிஸ்ஸில் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கும் மிங் சி-கு இது பற்றி கூறுகையில் இந்த மேக்புக் ஏர் மடிக்கணினிகள் 1000 டாலருக்கு (69,000) ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்று கூறியிருக்கிறார். தைவான் நாட்டின் எக்கனாமிக் டெய்லி நியூஸ் தகவலின் படி இண்டெல் நிறுவனத்தில் எட்டாவது ஜெனரேசன் கபி லேக் பிரோசஸ்ஸர்கள் இதில் பயன்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மேக்புக் ஏர் கடந்த மூன்று வருடங்களில் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த புதிய மடிக்கணினிகள் பற்றி வரும் தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம். இந்த மடிக்கணினிகளுக்கு இன்னும் சரியான பெயர் தேர்வு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மடிக்கணினி ரெட்டினா திரையுடன் வர இருக்கிறது.
ஆப்பிளின் புதிய அறிவிப்புகள்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் வெளியீடுகள் பற்றிய அறிவுப்புகள் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும். அப்போது தான் மேக்புக் ஏர் பற்றிய வதந்தி உண்மையா அல்லது பொய்யா என்று நமக்குத் தெரிய வரும்.