இந்த ஆண்டில் வெளிவரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அனைத்திற்கும் ஆண்ட்ராய்டின் அடுத்த வெளியிடான "ஆண்ட்ராய்டு பி'' அப்டேட்ஸ் வழங்கப்படும் என எச்.எம்.டி குளேபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்ச்சியின் போது, இந்த அறிவிப்பை எச்.எம்.டி குளோபல் நிறுவம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்த ஆண்டு வெளியான நோக்கியா 8, நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்கள் "ஆண்ட்ராய்டு பி" அப்டேட்ஸை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கூகிள் நிறுவனமானது தனது அடுத்த வெளியீடான “ஆண்ட்ராய்டு பி” வெளியீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது தான். சமீபத்தில் தான் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 வெளியானது என்பதல், “ஆண்ட்ராய்டு பி” அப்டேட்ஸ் அடுத்த வருடத்தில் தான் வெளியாக வாய்ப்புள்ளது. கூகிள் நிறுவனமானது “ஆண்ட்ராய்டு பி” குறித்த அறிவிப்பை அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் அந்நிறுவனத்தின் ஆண்டுவிழாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கு முன்னதாக “ஆண்ட்ராய்டு பி” அப்டேட்ஸானது நோக்கியாவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
முன்னதாக பின்லாந்தை சேர்ந்த எச்.எம்.டி குளோபல் நிறுவனமானது, நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றது. சமீபத்தில் எச்.எம்.டி நிறுவனமானது, ரூ.36,999 என்ற விலையில் நோக்கியா 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.