முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் (International Business Machines) வரும் ஆண்டுகளில் பல்வேறு துறை பணிகளுக்கு ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐ.பி.எம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா திங்களன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், மனிதர்களால் செய்யப்பட்டு வந்த 7,800 பணிகளை வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு மாற்ற திட்டம் உள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, HR போன்ற Back-office பணிகள் மற்றும் 30% non-customer-facing roles குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் மைக்ரோசாஃப்ட் கார்ப் ஆல் அறிமுகம் செய்யப்பட்ட OpenAI இன் வைரல் சாட்போட், ChatGPTக்கு பின் AI தொழில்நுட்பம் உலகம் எங்கிலும் கவனத்தை ஈர்த்தது. இது பல்வேறு துறைகளின் வேலைகளை மாற்றப்போவதாக கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“