பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா (Zain Nadella)இன்று காலை உயிரிழந்தார். 26 வயதான அவர், பிறக்கும்போதே பெரு மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஜைன் நாதெள்ளா இறந்த தகவலை, தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. மெயிலில், இந்த துயரமான சூழலில் சத்யா நாதெள்ளாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது.
கடந்த ஆண்டு, ஜைன் தனது சிகிச்சையின் பெரும்பகுதியை செலவிட்ட குழந்தை மருத்துவமனையுடன் இணைந்து , சியாட்டில் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மூளை ஆராய்ச்சி மையத்தின் ஒரு பகுதியாக, குழந்தை நரம்பியல் அறிவியலில் ஜைன் நாதெள்ளா எண்டோவ் நாற்காலியை சத்யா நாதெள்ளா நிறுவினார்.
ஜைன் நாதெள்ளா மறைவு குறித்து அவர் சிகிச்சைப் பெற்றுவந்த குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் ஸ்பெரிங் தனது குழுவிற்கு அனுப்பிய செய்தியில், " இசை மீதான ஆர்வமும், பிரகாசமான புன்னகையும், குடும்பத்தினருக்கும் அவரை நேசித்த அனைவருக்கும் அளித்த மகிழ்ச்சிக்காகவும் ஜெயின் எப்போது நினைவுகூரப்படுவார் என தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil