மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஒரு ஆண்ட்ராய்ட் போனை தயாரித்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
மைக்ரோசாப்ட் ஸ்டோர் ரெப் இது பற்றி கூறும் போது மிக விரைவில் நீங்கள் ஒரு எங்கள் நிறுவனத்திடம் இருந்து ஆண்ட்ராய்ட் போனை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது,
லுமியா போன் மீண்டும் எப்போது சந்தைப்படுத்தப்படும் என்று கேட்ட போது, எங்களின் பொறியாளர்கள் மிகவும் திறம்பட செயல்படும் லுமியாவை உங்களுக்கு தருவதற்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.
லுமியா போன் அத்தனை வெற்றிகரமாக மக்களிடம் சென்று சேரவில்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் தொடர்ச்சியாக தங்களின் செயலிகளை புதுப்பித்துக் கொண்டும், புதிய செயலிகளை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் போன்களுக்கும் வழங்கி வருகிறது மைக்ரோசாப்ட்.
2019ம் ஆண்டு இறுதிக்குள் தன்னுடைய மூன்று கனவு ப்ரோஜெக்ட்டுகளான லிப்ரா (சர்பேஸ் கோ). கார்மல் (சர்பேஸ் புரோ 6) மற்றும் ஆண்ட்ரோம்டா ஆகியவற்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.