டெல்லியில் இன்று மோட்டோ E5 மற்றும் E5 ப்ளஸ் போன்களை அறிமுகம் செய்தது மோட்டோ நிறுவனம். இந்தியாவில் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பட்ஜெட் போன்களுக்கு போட்டியாக இவ்விரண்டு போன்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மோட்டோ E5 ப்ளஸ்
6 இன்ச் எச்டி திரை மற்றும் 18:9 ஸ்கிரீன் ஃபார்மெட் கொண்ட இந்த போனினை இயக்குகின்றது ஸ்னாப்ட்ராகன் 430 ப்ரோசஸ்ஸர். 3GB RAM, 32GB இண்டெர்னல் ஸ்டோரேஜ், 12MP ஸ்மார்ட்போன் பின் கேமரா மற்றும் 8MP முகப்பு கேமராவினைக் கொண்டிருக்கிறது. 5000 mAh கெப்பாசிட்டி கொண்டுள்ள பேட்டரி தான் இதனுடைய சிறப்பம்சம். பின்பக்க கேமரா லேசர் ஆட்டோ ஃபோக்கசினையும் முன்பக்க கேமரா செல்ஃபி ஃபிளாஷினையும் கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களாலும் முழு எச்.டி வீடியோவினை பதிவு செய்ய இயலும். இதன் விலை ரூ. 11, 999 ஆகும்.
மோட்டோ E5
இதே E சீரியஸ்ஸில் வெளியான மற்றொரு ஸ்மார்ட் போனான E5ன் சிறப்பம்சங்கள் இதோ. ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போனின் ப்ரோசஸ்ஸார் க்வால்கோம் ஸ்னாப்ட்ராகன் 425/427 ஆகும். இதனுடைய RAM கெப்பாசிட்டி 2GB மற்றும் இண்டெர்னல் ஸ்டோரேஜ் 16GB ஆகும். இதனுடைய பேட்டரி 2800 mAh திறனைக் கொண்டது. மேலும் 8MP பின் கேமரா மற்றும் 5MP முகப்பு கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த போனின் ஸ்கிரீன் ஃபார்மெட் 16.9 ஆகும். 5.2 இன்ச் திரையைக் கொண்டது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.9,999 ஆகும்.
இவ்விரண்டு போன்களின் விற்பனையும் இன்று நள்ளிரவில் தொடங்குகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் எஸ்பிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ. 800 தள்ளுபடி அளித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.