அதிக ரத்த அழுத்தம் துணை நோய்களை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தம் ரத்த குழாய்களை குறுகலாக்குகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில், 50 % மக்களுக்கு ரத்தம் அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சோடியம், உப்பு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடலாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
பாக்கெட் சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீசில் உள்ளிட்ட உணவுகளில் அதிக சோடியம் இருக்கிறது. வளர்ந்த நபர்கள் ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் சோடியம் வரை எடுத்துகொள்ளலாம்.
சோடியம் அதிகமாக உள்ள உணவுகள், சிப்ஸ், பிரட், பீட்சா, சான்விச், பதப்படுத்தப்பட்ட மாமிசம், பதப்படுத்தப்பட்ட சூப். ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
அதிகமான சர்க்கரை சேர்த்த உணவுகள் சாப்பிடுவது, ரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். 2014 வெளியான ஒரு ஆய்வு கூறும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உப்பு அதிகமாக எடுத்துக்கொள்வதைவிட சக்கரை அதிகமாக எடுத்துகொள்ளக்கூடாது. சாப்பிட்டபின் சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள், முன்பே பேக் செய்யப்பட்ட உணவுகள். சாக்லேட் ஆகியவையை எடுத்துகொள்ள கூடாது.
மேலும் பி.பி இருப்பவர்கள் ரெட் மீட்-யை எடுத்துகொள்ளகூடாது. ஆடு, பீஃப், பன்றி, ஆகியவற்றை எடுத்துகொள்ள கூடாது. இதுபோலவே கெச்சப், பொறித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.