Advertisment

இ.பி.எஸ் கழுத்தில் பா.ஜ.க என்னும் நச்சுப் பாம்பு: ப. சிதம்பரம் தாக்கு

எடப்பாடி பழனிசாமி கழுத்தில் பா.ஜ.க என்னும் நச்சுப் பாம்பு சுற்றி உள்ளது என ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் ப. சிதம்பரம் விமர்சனம் செய்தார்.

author-image
WebDesk
New Update
இ.பி.எஸ் கழுத்தில் பா.ஜ.க என்னும் நச்சுப் பாம்பு: ப. சிதம்பரம் தாக்கு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.கவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.கவில் தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து அக்கட்சி மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். சூரப்பட்டி நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வுடன் இருப்பதை, பரமசிவன் கழுத்தில் பாம்பு என்று நினைத்து இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் நச்சுப் பாம்பாக பா.ஜ.க உள்ளது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி, பண்பாடு, கலச்சாரத்திற்கு, காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரானது பா.ஜ.க. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில், பிழைக்க வழியில்லாமல் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கிறது என்று இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து எவரும் வேலையில்லாமல் அங்கு செல்வதில்லை. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதிகளை எல்லாம் மத்திய அரசு தர மறுப்பதை பற்றி இ.பி.எஸ் பேசுவதே இல்லை. நீட் தேர்வு விலக்கு வேண்டும் என எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் மௌன சாமியாக உள்ளார்.

தி.மு.க தேர்தல் அறிக்கை என்பது 5 ஆண்டுகளுக்கான அறிக்கை. தேர்தல் அறிக்கையை படிப்படியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். கொரோன நிவாரண உதவித் தொகை கொடுக்காத எடப்பாடி அரசு, இந்த அரசை பார்த்து என்ன உதவித் தொகை கொடுத்தீர்கள் என்று கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை. பெண்கள் உள்பட அனைவரின் மனம் குளிரும் வகையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு வரும்.

மத்திய பா.ஜ.க ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவே வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கல்வி, சுகாதாரம், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களுக்கான நிதியை மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் குறைத்துள்ளார்" என்று குற்றஞ்சாட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Erode P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment