தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து 330 கி.மீ தொலைவில் உள்ளது. நகர்வு வேகம் மணிக்கு 12 கி.மீ.யில் இருந்து 8 ஆக குறைந்ததுள்ளது என்று வானிலை ஆவ்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபிரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.