எழும்பூர் அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி
சென்னை போட்டோ பினேலே நடத்தும் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
சென்னை போட்டோ பினேலே நடத்தும் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. இதில், பள்ளி மாணவர்கள் எடுத்த 120 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.