Advertisment

ட்ரோன்களால் சுத்திகரிக்கப்படும் CORONA மருத்துவமனைகள்!

author-image
Harinee Chandrasekaran
New Update

இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமரா 15 முதல் 20 மீட்டர் வரை மக்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. 3 மணி நேரத்தில் 600 க்கும் மேற்பட்டவர்களை ஸ்கேன் செய்ய முடியும், மேலும் இதில் சிறிய டேங்க் பொருத்தப்பட்டுள்ளது, இது சுத்திகரிக்க பயன்படுகிறது. பொதுமக்களுக்கான அறிவிப்புகளுக்காக ஒலிபெருக்கி மற்றும் இரவு பார்வை கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. டெவலப்பர் மற்றும் இந்தியன் ரோபாட்டிக்ஸ் சொல்யூஷன் இந்த ட்ரோனை வைத்து டெல்லி என்.சி.ஆரின் பல பகுதிகளை சுத்திகரித்தது. தற்போது மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Corona Virus Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment