ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. ‘பசங்க’ மற்றும் ‘கோலிசோடா’ படத்தில் சிறுவனாக நடித்த பாண்டி, தமிழ் என்ற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், பால சரவணன், சிங்கம்புலி, லிவிங்ஸ்டன், ரேகா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இஷான் தேவ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை, கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது.