காமராஜர், தமிழ்நாடு வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றவர்! தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அவருக்கு எப்போதும் யாருக்கும் விருந்து கொடுக்கும் பழக்கம் கிடையாது. மிக எளிய உணவை உண்ணும் அவர், ஏழை எளிய மக்கள் படிக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு மதிய உணவு கொடுத்தால்தான் பள்ளிக்கு வருவார்கள் என்பதை உணர்ந்து மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரின் இந்த முரண்பாடுதான், மக்களிடம் அவரை பெருந்தலைவராக உயர்த்தியது என்கிறார், பெருமாள் மணி