தமிழ் திரையுலகில் புதன்கிழமை காலை தொடங்கிய வருமான வரி சோதனைகள் வியாழக்கிழமையும் தொடர்ந்தன. இந்த சோதனையில், கிட்டத்தட்ட ரூ.300 கோடி வருமானம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.சென்னை மற்றும் மதுரையில் மொத்தம் 38 இடங்களில் இந்த வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டன. ஏஜிஎஸ் சினிமாஸ், திரைப்பட ஃபைனான்சியர் அன்பு செழியன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.