தாய்லாந்தில் நாட்டில் கோ ஸ்யாம்யுவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த போது வீரர் ஒருவர் அங்குள்ள முதலையின் வாயின் உள்ளாக தனது தலையை வைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அமைதியாக இருந்த முதலை, திடீரென அவரது தலையை கடித்துவிட்டது. வலியால் துடித்த அந்த சாகச வீரர் அதிர்ஷ்டவசமாக முதலையிடம் இருந்து தப்பித்துள்ளார்.