சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பிரத்தியேக பூங்கா திறக்கப்பட்டிருக்கிறது. கோட்டூர் கார்டன் 1வது குறுக்கு தெருவில், ரூ.2.23 கோடி செலவில் இந்த உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் திறன் மேம்படும் வகையில், நடைபயிற்சி வசதிகளும், கூடை ஊஞ்சல் வசதிகளும் உள்ளன. மேலும், குழந்தைகள் மணலில் விளையாட, மணலுடன் கூடிய பகுதிகள், சக்கர நாற்காலி ஊஞ்சல் வசதி, இசை ஒலி எழுப்பும் குழாய்கள் என பல வசதிகள் உள்ளன. அதுகுறித்த விரிவான வீடியோ இங்கே!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“