Advertisment

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில்கருகிய கங்காரு குட்டியின் மனதை உலுக்கும் புகைப்படம்

ஆஸ்திரேலியாவின் கடுமையான காட்டுத்தீயின் கோரமான பாதிப்பைக் காட்டும் விதமாக காட்டுத்தியில் சிக்கிய கங்காரு குட்டி ஒன்று வெளியேற முடியாமல் வெளியில் நின்று கருகிய புகைப்படம் இதயத்தை உடைக்கும்படியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
astralia, australia bushfire, nsw bushfires, Australian bushfires tragedy, ஆஸ்திரேலியா காட்டுத்தீ, burnt kangaroo bushfire, காட்டுத்தீயில் கருகிய கங்காரு குட்டி, australia bushfire wildlife killed, burned baby kangaroo photos, burnt kangaroo viral photo

astralia, australia bushfire, nsw bushfires, Australian bushfires tragedy, ஆஸ்திரேலியா காட்டுத்தீ, burnt kangaroo bushfire, காட்டுத்தீயில் கருகிய கங்காரு குட்டி, australia bushfire wildlife killed, burned baby kangaroo photos, burnt kangaroo viral photo

ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, அந்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய வெளியேற்றங்களில் ஒன்றைத் உருவாக்கியுள்ளது. இதனால் 12க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த காட்டுத்தீயில் கங்காருக்கள், கோலாக்கள், மார்சுபியல்களும் பலியாகியுள்ள்ளன. ஆஸ்திரேலியாவின் கடுமையான காட்டுத்தீயின் கோரமான பாதிப்பைக் காட்டும் விதமாக காட்டுத்தியில் சிக்கிய கங்காரு குட்டி ஒன்று வெளியேற முடியாமல் வெளியில் நின்று கருகிய புகைப்படம் இதயத்தை உடைக்கும்படியாக உள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களை ஆன்லைனில் திகிலடையச் செய்துள்ளது.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு வானுயர எரியும் காட்டுத்தீ ஜுவாலைகல் அந்நாட்டின் தெற்கு கடற்கரையின் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களைத் சென்றனர். ஆனால், விலங்குகள்தான் பாவம். அவை தீயில் சிக்கி பலியாகி வருகின்றன. அடிலெய்ட் மலையில் முள்வேலி வேலியில் சிக்கிய ஒரு கங்காரு குட்டி காட்டுத்தியில் கருகி பலியான புகைப்படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பலரின் மனதை உலுக்கி வைரல் ஆகிவருகிறது.

இது போன்ற ஒரு கிராஃபிக் புகைப்படத்தை வெளியிடுவது கடினமான முடிவு, ஆனால் ஆஸ்திரேலியாவின் புஷ்ஃபயர் நெருக்கடியின் மிருகத்தனமான யதார்த்தத்தைக் காண்பிப்பதற்காக, விளம்பரதாரரின் மூத்த புகைப்படக் கலைஞரான பிராட் ஃப்ளீட் முன்னோக்கி சென்று அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

இந்த புகைப்படம் விரைவாக சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் பரவியது. சிலர் இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்தாலும், பலர் இந்த பேரழிவு தரும் படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, இது காலநிலை மாற்றம் மற்றும் வெகுஜன அழிவை உலகம் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும் நேரம் இது என்று கூறினர்.

“காட்டுத்தீயில் பல விலங்குகள் தப்பிக்க முடியவில்லை. லட்சக்கணக்கானவை எரிந்தன. என் இதயம் உண்மையாகவே உடைந்துவிட்டது. இது மிகவும் அழிவுகரமானது. இது என் ஆத்மாவை காயப்படுத்துகிறது” என்று ஆஸ்திரேலியா காட்டுத்தீ பற்றி பேஸ்புக்கில் ஒரு பத்திரிகையாளர் எழுதினார்.

“ஆஸ்திரேலியா நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் சூழ்ந்திருக்கும் தற்போதைய புயல்களில் நம் கண்களுக்கு முன்பாக எரியும் நம் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் உதவுவதற்கு பொருத்தமான ஆதாரங்களை எமது அரசு என்ன செய்யப்போகிறது? காலநிலை மாற்றத்தைப் பற்றி ஏதாவது செய்வதற்கு முன்பு நாம் எவ்வளவு பேரழிவைச் சந்திக்க வேண்டும்? கோலாக்களின் இழப்பு? நாம்து தனித்துவமான மற்றும் அழகான வனவிலங்குகளுக்கான முக்கியமான வாழ்விடங்களை பரந்த அளவில் அழிப்பது? எத்தனை ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டு மனித உயிர்களை இழக்க வேண்டும்? ”என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் காட்டுத்தீ தொடங்கியதில் இருந்து சுமார் 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன பாதிக்கப்பட்டுள்ளன என்று சிட்னி பல்கலைக்கழக சூழலியல் நிபுணர் கிறிஸ் டிக்மேன் கூறினார்.

உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. பூர்வீக வனவிலங்குகள் மற்றும் விவசாய கால்நடைகள் இறப்புகள் அதிக அளவில் உள்ளன. ஏற்கனவே ஆபத்தான நிலையில் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள உயிரினங்கள் பலி ஒருபோதும் தெரியவராது என்று கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் 7 நியூஸ் செய்திகளின்படி, பேரழிவிற்குள்ளான விவசாயிகள் தங்களது இறந்த மற்றும் காயமடைந்த கால்நடைகளை காப்பீட்டு கோரிக்கைகளுக்காக புகைப்படம் எடுக்குமாறு கூறுகிறார்கள். நில உரிமையாளர்கள் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் எரிந்த பல விலங்குகளை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்கின்றனர்.

இந்த கட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் இப்போது பெரும்பாலும் கருணைக்கொலை செய்யும் வேலையைச் செய்து வருகின்றனர். “அவைகள் மிகவும் கடுமையாக எரிந்திருக்கின்றன. அவைகளின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை விட நீங்கள் சிறப்பாக எதுவும் செய்ய முடியாது” என்று வனவிலங்கு விக்டோரியா பாஸ் மேகன் டேவிட்சன் கூறினார்.

Viral Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment