Bull drives off two lioness in Gujarat village : காடுகளில் போதுமான உணவு இல்லாத காலங்களில் வனவிலங்குகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையான ஒன்று. குஜராத் மாநிலத்தில் உள்ள விசாவர்தர் தாலுக்காவில் அமைந்திருக்கும் மோடா ஹத்மாதியா கிராமத்தில் இரண்டு இளம் சிங்கங்கள் நடமாடியது ஜுனாகத் தெருவில் மாட்டப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த இரண்டு சிங்கங்களும் அங்கே உள்ள காளை மாட்டை தாக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கு சிறிதும் சளைக்காத அந்த காளை தன்னுடைய கொம்புகளை கொண்டு சிங்கங்களை மிரட்டியும் விரட்டவும் ஆரம்பித்தது.
ஆனால் இறுதியில் இந்த இரண்டு சிங்கங்களையும் விரட்டி விட்டு வேறு பாதுகாப்பான பகுதிக்கு சென்றுவிட்டது இந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது.
காளை மட்டும் சாலையில் தனியாக இருக்கிறது என்றும், இன்னும் இந்த சிங்கங்கள் வேட்டையாடும் அளவிற்கு அனுபவம் பெறும் வயதைப் பெறவில்லை என்றும் வாதித்து வருகின்றனர். ஆனால் சிங்கங்கள் கிராமத்திற்குள் வந்தது அங்குள்ள அனைவரையும் ஒரு வித அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil