Advertisment

ஒரே அறையில் சிறுத்தையும், நாயும்: அடுத்து நடந்தது என்ன?

சிறுத்தைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் சிலர் பரிந்துரைத்து வருகின்றனர்

author-image
WebDesk
New Update
ஒரே அறையில் சிறுத்தையும், நாயும்: அடுத்து நடந்தது என்ன?

நாயும், சிறுத்தையும் ஒரு அறையில் சிக்கிக் கொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பதிவில், " அனைவருக்கும் ஒரு காலம் வரும். நாய் ஒன்று மணிகணக்கில் சிறுத்தையிடம் சிக்கி இருப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்னும் பிழைத்திருக்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும் என்று கருதி கொள்ளலாம்” என்று பதிவிட்டார்.

 

 

கன்னடாவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு நாயும், அதை காவு வாங்க துரத்திய சிறுத்தையும் வீட்டின்  கழிவறைக்குள் புகுந்தன. இதனை சுதாரித்துக் கொண்ட வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கழிவறையை வெளியில் இருந்தவாறு பூட்டினர். பின்னர் வனத்துறையினர் உதவியால் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது என கச்வான் மேலும் தெரிவித்தார்.

 

 

சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பிய நாயின் தைரியத்தையும், பொறுமையையும், அமைதியையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். பூட்டிய அறைக்குள் சிறுத்தை தான் சந்திக்க இருந்த  ஆபத்தை உணர்ந்த காரணத்தினால், நாயை வேட்டையாட வில்லை என்றும் தெரிவிக்கின்றனர். சிறுத்தைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் சிலர் பரிந்துரைத்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment