Advertisment

கடற்கரைக்கு மிக அருகில் தென்பட்ட டால்பின்கள்; மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

மார்ச் மாதத்தில் ஹம்பேக் டால்பின் தெற்கு மும்பை கடற்கரை அருகே பார்க்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
கடற்கரைக்கு மிக அருகில் தென்பட்ட டால்பின்கள்; மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Dolphins spotted in Vashi Creek near Mumbai goes viral on social media : மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் வாஷி க்ரீக் அருகே மூன்று டால்பின்கள் நீரில் விளையாடும் காட்சிகள் வரைலாக பரவி வருகிறது.

Advertisment
சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் ஒரு பெரிய டால்பினும் இரண்டு சிறிய டால்பின்களும் விளையாடி வருகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீரில் இருந்து மேலே எழும்பி பின்பு நீருக்குள் செல்லும் காட்சி பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கடற்கரையில் இருந்து பார்க்கும் தொலைவு வரை டால்பின்கள் வந்து செல்லும் காட்சி பார்வைக்கு விருந்து படைத்துள்ளது. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

கொரோனா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பெரும்வாரியாக மாறியுள்ளது. அதனால் கூட இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். மார்ச் மாதத்தில் ஹம்பேக் டால்பின் தெற்கு மும்பை கடற்கரை அருகே பார்க்கப்பட்டது.

Viral Social Media Viral Trending
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment