சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
Advertisment
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர்
போட்டோவை பார்க்கும் பலரும் அதில் விலங்கு இல்லை என்கிற கருத்தை முன்வைத்தனர். ஆனால், உண்மையாகவே பூனை ஒன்று உள்ளது. அதற்கு, புகைப்படத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மரக் குவியலிக்கு நடுவே பூனை படுத்திருப்பதை காண முடியும்.
நீங்கள் பூனையை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? பதிலை கீழே காணலாம்
வேலிக்கு அருகில் உள்ள பெரிய மரக்குவியலை நன்கு பாருங்கள். அப்போது இரண்டாவது மரக் குவியலின் மேல் பூனை தூங்கிக் கொண்டிருப்பதை காண முடியும். நிறம் காரணமாக பூனையை கண்டறிவது கடினமாகிவிட்டது.
இந்த போட்டோவை, உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil