ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.
மனிதர்கள் மனிதத் தன்மையை மறந்து, பலரும் சாதி, மதம், வெறுப்பு, வன்முறை என்று மோசமான போக்கில் போய்கொண்டிருக்கும் நிலையில் விலங்குகள் கருணையைப் பற்றி மனித இனத்துக்கு பாடம் புகட்டும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்ட காட்டுத் தீயில், 50 மில்லியன் விலங்குகள் இறந்தன. கொடூரமான தீயில் காட்டில் இருந்த செடிகொடிகள், மரங்கள், என அனைத்து கருகி சாம்பாலானது. இந்த காட்டுத் தீயில் பல பெரிய விலங்குகள் உயிரிழந்ததால் அதன் குட்டிகள் ஆதரவற்று தவித்து வருகின்றன.
பொதுவாக நரிகளைப் பற்றி பலரும் சிறு வயதில் கதைகள் கேட்டிருப்போம். நரிகள் தந்திரமானவைகள். வஞ்சகம் நிறைந்தவைகள் என்று கதைகள் கேட்டிருப்போம். சிறு வயதில் கேட்கிற எதுவொன்றையும் அப்படியே நம்பிவிடுவோம். நரிகளைப் பற்றிய அந்த எண்ணம் மிகவும் தவறானவை என்று கூறும்படி ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
A #Fox allows itself to feed #Koala Babies in #Australia. In #AustraliaBushfires babies have lost their mothers & many mother animals have lost their little ones. Let's call it as "Animality" in the era of vanishing "Humanity" ?#motherhood #MotherLove #Australiafire pic.twitter.com/tj7qVzbqBk
— Sanket Datta (@sanketdattahere) January 26, 2020
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் வைரலாகி பரவி வருகிறது. காட்டு தீயில் தனது தாயை இழந்த குட்டிகளுக்கு வேற்றுமை பாராமல் பாலூட்டிய நரியின் செயலை டுவிட்டர் பயனாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.