if you see tiger we are not responsible for that , தினமும் நாம் இணையதளத்தில் பல்வேறு ஆப்டிகல் இல்யூஷன் ஒவியங்கள் மற்றும் புகைப்படங்களை கடந்து வருகிறோம். அந்த ஓவியங்கள் மூலம் நம்மைப்பற்றிய பல்வேறு தகவல்களை நாம் தெரிந்துகொண்டிருப்போம். அவை அனைத்தும் நமது குணங்கள் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக இருக்கும். ஆனால் இந்த சோதனையானது சமூகத்தோடு நமது பழகும் முறை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும்.
குறிப்பாக முதலில் உங்களை சந்திக்கும்போது என்ன தோன்றும் என்பது பற்றி இந்த ஓவியங்கள் விளக்குகிறது. நாம் முதலில் ஒருவரை சந்தித்து என்ன போசுகிறோமோ அவரப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பது வாழ் நாள் முழுவதும் நமது நினைவில் இருக்கும். உதராணமாக உங்கள் நண்பர்களைப்பற்றி நினைத்து பார்த்தால் அவர்களை முதலில் சந்தித்த நிகழ்வுதான் நமது நினைவில் இருக்கும்.
இதனால் நாம் முதலில் ஒருவரை சந்திக்கும்போது நமது மீது ஏற்படும் கண்ணோட்டம் மிகவும் முக்கியம்.
இந்த ஓவியத்தை 5 நொடிகள் பார்க்கும்போது ஒரு புலியின் உருவம் தெரிந்தால், உங்களை முதலில் சந்திக்கும் நபர் நீங்கள் உறுதியானவர் மற்றும் மிகவும் நம்மையுடையவராக இருப்பீர்கள் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த உறுதியான குணம் மற்றவர்களுக்கு தொல்லையாகவும் இருக்கலாம்.
இதுவே உங்களுக்கு மரம் தெரிந்தால், உங்களை முதலில் பார்க்கும் நபர் நீங்கள் எந்த குறிக்கோளும் இல்லாத நிம்மதியான மனிதராக நினைப்பார்கள். இதற்கு காரணம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க வேண்டிய விஷயங்களை சாதித்துவிட்டீர்கள். மேலும் நீங்கள் எதை செய்தாலும் அமைதியான நிலையில் செய்யவே விருப்பப்படுவீர்கள். இதுவே உங்களை மற்றவர்கள் வியந்து பார்க்கும் விஷயமாக இருக்கும்.