Advertisment

”சிஇஒ-வா இருந்தா என்ன? என் பிள்ளைக்கு முதலில் நான் அப்பா! ” வைரலாகும் சூப்பர் தந்தை.

இவை எல்லாமே பொய் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் சி இ ஓ அசுதோஷ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
internet viral today

internet viral today

internet viral today : டெல்லியில் மிகப் பெரிய நிறுவனத்தின் சிஇஓ கம்பெனியில் அமர்ந்துக் கொண்டே தனது மகளுக்கு பால் ஊட்டி பாதுகாப்பாக பார்த்துக் கொண்ட புகைப்படம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisment

தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது. இப்படி தாயின் அன்பை கூற ஒருநாள் போதாது.

தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் அர்பணிப்பு. எப்போதுமே பிள்ளைகளின் முதல் ஹீரோ அவர்களின் தந்தை தான்.சினிமாவில் வரும் ஹீரோக்கள் 3 மணிநேரம் மட்டுமே ஆனால் தனது இறுதி மூச்சு வரை பிள்ளைகளுக்காகவே வாழும் தந்தைகள் எப்போதுமே போற்றப்பட வேண்டியவர்கள்.

பொதுவாகவே, பணக்கார அம்மா, அப்பா என்றால் அவர்கள் பிள்ளைகளை சரியாக கவனித்துக் கொள்ள மாட்டார்கள். அருகில் இருந்து பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதை செய்ய மாட்டார்கள். எல்லாத்துக்கும் வேலையாட்களை வைத்துக் கொண்டு குழந்தைகளை அவர்களிடம் தந்துவிடுவார்கள் என ஏகப்பட்ட கருத்துக்கள் உலா வரும். இவை எல்லாமே பொய் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் சி இ ஓ அசுதோஷ் ஹர்போலா.

நோய்டாவில் உள்ள மிகப் பெரிய தனியார் நிறுவனத்தின் சி.இ.ஒ வான இவர், தனது அலுவலகத்திற்கு மகளை அழைத்து வந்துள்ளார். மீட்டிங் இடையிலும் தனது மகளுக்கு பால் கொடுத்து அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டுள்ளார். இவரின் செயலைக் கண்டு வியந்த ஊழியர், இந்த சூப்பர் அப்பாவை அப்படியே படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த புகைப்படம் அடுத்த 1 மணி நேரத்தில்யே படு வைரலானது. சி இ ஓ அசுதோஷ் ஹர்போலாவுக்கு "சூப்பர் தந்தை" என சிறப்பு பெயரையும் அளித்துள்ளனர் இணையவாசிகள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment