Advertisment

35 கிலோ மலைப் பாம்பு வறுவல்… கேரளா யூடியூபரின் வேற லெவல் அதிர்ச்சி குக்கிங் வீடியோ!

கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்த குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
35 கிலோ மலைப் பாம்பு வறுவல்… கேரளா யூடியூபரின் வேற லெவல் அதிர்ச்சி குக்கிங் வீடியோ!

கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்து குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதையே இந்தியாவில் செய்திருந்தால் இன்னேரம் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் வன விலங்குகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

யூடியூபில் அரசியல், சினிமா வீடியோக்களைவிட சமையல் வீடியோக்கள்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதே போல, குக்கிங் வீடியோக்களை வெளியிடும் யூடியூபகர்கள் பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதனால், குக்கிங் வீடியோ வெளியிடுபவர்கள் விதவிதமான உணவை சமைத்து வீடியோ பதிவேற்றி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார்கள்.

அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் விளாக்கர் ஃபிரோஸ் சுட்டிபாரா ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு குக்கிங் வீடியோ வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

குக்கிங் வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிப்பாரா தனதுயூடியூப் சேனலில் தனித்துவமான சுவை மிகுந்த உணவை சமைத்து வீடியோக்களை வெளியிடுவார். இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஃபிரோஸ் சுட்டிபார 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி, இந்திய மசாலாவைப் போட்டு கிரில்லில் வறுத்துக் காட்டி அதிர்ச்சி அளித்துள்ளார்.

பாம்பை சமைப்பதற்கு முன், ஃபிரோஸ் இந்தோனேசியாவில் வீடியோவைப் படமாக்குவதாகக் கூறுகிறார். மேலும், இந்தியாவில் காட்டு விலங்குகளைக் கொல்வதும் சமைப்பதும் குற்றம் என்பதால் பார்வையாளர்கள் இதை வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோவில் ஃபிரோஸ் சுட்டிபார, தனது நண்பருடன் ஒரு பிளாஸ்டிக் பேஸ்கட்டில், ஒரு பெரிய மலைப்பாம்பை எடுத்து வருகிறார். அதை, ஒரு இந்தோனேசியரை வைத்து வெட்டி தோலை உரித்து, கரியை எடுத்து, இந்திய மசாலாவைத் தடவி, கிரில்லில் வைத்து வறுக்கிறார்கள்.

இந்த வீடியோ, குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஆனால், இது போல, மலைப்பாம்பை கிரில் செய்ய யாரும் முயற்சி செய்ய வேண்டாம். ஏனென்றால், இந்தியாவில் பாம்பு, மலைப்பாம்பு போன்றவிலங்குகளைக் கொல்வது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய செயலில் ஈடுபட்டால் நிச்சயம் சிறை தண்டனை கிடைக்கும். அதனால், ஃபிரோஸ் சுட்டிபார இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

ஃபிரோஸ் 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி தோலை நீக்கி சுத்தம் செய்து இந்திய மசாலாவைத் தடவி கிரில்லில் வறுத்து எடுத்து மிகப் பெரிய வாழை இலையில் வைக்கிறார். அதை அங்கே உள்ள இந்தோனேசியர்களும் சில இந்தியர்களும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சாப்பிடுகிறார்கள். குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் என்றுள்ள ஃபிரோஸின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 1,67,000 பேர் லைக் செய்துள்ளனர். 7,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Youtube Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment