viral video : குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள குதிரை பண்ணையில், இரவுநேரத்தில் சிறுத்தை ஒன்று, குதிரையை பார்க்க தினமும் வரும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் ஜெகதீஷ் படேல் என்பவருக்கு சொந்தமான குதிரை பண்ணையில், தினமும் இரவு காட்டு விலங்கின் நடமாட்டம் இருப்பதை அறிந்த ஜெகதீஷ், வனவிலங்கு ஆர்வலரான அரவிந்த் பவாரை தொடர்புகொண்டார்.
வனவிலங்கு ஒன்றின் கால்தடம் அங்கு தென்பட்டதால், அது என்ன விலங்கு என்பதையறிய அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. .அந்த கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், இரவு நேரத்தில், சிறுத்தை ஒன்று அங்கே வருவது கண்டறியப்பட்டது.
சிறுத்தை, குதிரையை அடித்து கொன்று உணவாக தின்றுவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சிறுத்தை தினமும் இரவு வருகிறது. குதிரையை பார்த்தவாறே ஒரு இடத்தில் அமர்கிறது. சிறிதுநேரத்திற்கு பின், சிறுத்தை சென்றுவிடுகிறது. இந்த நிகழ்வு விசித்திரமாகவே இருப்பதாக ஜெகதீஷ் பேடலும், அரவிந்த் பவாரும் தெரிவித்துள்ளனர்.
அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவின் சிறுபகுதி, சமூகவலைதளத்தில் பதிவேற்றப்பட்டது. அந்த வீடியோ, தற்போது பலரால் தொடர்ந்து பகிரப்பட்டுங வைரலாகி வருகிறது.