Advertisment

'இ லோகத்தில் இவரைப் போல ஒரு அதிர்ஷ்டசாலி உண்டா சாரே!' லாட்டரி விற்பவருக்கு விழுந்த 5 கோடி பம்பர் பரிசு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lottery seller wins Vishu bumper prize worth Rs 5 crore

Lottery seller wins Vishu bumper prize worth Rs 5 crore

கேரளாவில் லாட்டரி விற்கும் தொழிலாளி ஒருவருக்கு விஷ்ணு பம்பர் லாட்டரியில் ரூ.5 கோடி விழுந்திருக்கிறது. கரிகுலம் பகுதியைச் சேர்ந்த  39 வயதான வடுவம்மன் பெட்டி செல்லப்பா தான் அந்த 'லக்கி மேன்'. வழக்குலம் பகுதியில் அவர் 12 வருடங்களாக தங்கியிருக்கிறார். முதலில் ஹோட்டலில் பணிபுரிந்து வந்த செல்லப்பா, அதன்பிறகு லாட்டரி சீட்டுகள் விற்கத் தொடங்கினார். தனது மனைவில் சுமிதா, பிள்ளைகள் சஞ்சீவ், செல்வநமீதா ஆகியோருடன் வாடகை வீட்டி தங்கியிருக்கிறார்.

லாட்டரி சீட்டு வாங்குவதற்காக, செல்லாப்பாவின் பிள்ளைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 200 ரூபாயை கொடுத்திருக்கின்றனர். வழகுலம் பகுதியில் உள்ள பிரதீக்ஷா லாட்டரி கடையின் டீலர் நௌஷத் என்பவரிடம் தான் அந்த லாட்டரியை வாங்கியிருக்கிறார். அதில் தான் ரூ.5 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

பரிசை பெற்றுக் கொண்ட செல்லப்பா - சுமிதா தம்பதி சொந்த இடம் வாங்கி அதில் வீடு கட்டி குடியேறி, பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment