இது தவளை-ன்னு அடிச்சு சொல்லுவீங்க… குதிரைன்னு சொன்னா நம்புவீங்களா?!
Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இருப்பது தவளைதான்னு அடித்து சொல்வீர்கள்... ஆனால், இது குதிரை என்றால் நம்புவீர்களா? விடை என்ன பாருங்கள்.
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றை நீங்கள் உறுதியாக இதுதான் தெரிகிறது என்று சொல்லும்போதே அடுத்த பார்வையில் அது இன்னொரு உருவமாகத் தெரியும்.
Advertisment
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்று கவிஞர் மருதகாசி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பொருந்தும்.
ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். பிறகு முடிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உங்கள் தலைமுடியை சிச்சிகொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படித்தான், முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிகிறது. ஒரு தவளை தெரிகிறது என்று கூறுவீர்கள். ஆனால், இது தவளை இல்லை என்று சொன்னால், நீங்கள் இது தவளைதான்னு அடிச்சு சொல்லுவீங்க… ஆனால், இது குதிரை என்று சொன்னால் நம்புவீர்களா?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு தவளை இருப்பது போலத் தோன்றும். ஆனால், இது ஒரு குதிரையின் படம் என்பதைப் பாருங்கள்.
அதனால்தான், ‘கண்ணை நம்பாதே’ என்ற கவிஞர் மருதகாசியின் வரிகள் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துமோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்துகிறது இல்லையா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”