தனது தாயார் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை முழு மனதோடு ஆதரித்த அவரின் மகன் பகிர்ந்துள்ள பதிவு, இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது
வரை நமது சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
அதிலும் குழந்தையுடன் இருக்கும் கைம்பெண் என்றால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூட அவருக்கு மறுமணம் செய்து வைப்பது பற்றி சிந்திப்பதே இல்லை.
இந்நிலையில், 2013ம் ஆண்டு தனது 44 வயதில் கணவனை இழந்த பெண், தனது 52ஆவது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார்.
இந்தத் தகவல் துபையில் பணியில் இருக்கும் அவரது மகன் ஜிமீத் காந்தி என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து தெரியவந்துள்ளது.
அவர் வெளியிட்ட பதிவில், தனது தாய் காமினி காந்தி, 2013ம் ஆண்டு 44 வயதில் கணவனை இழந்தததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது அம்மாவிற்கு 3-ம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், சுமார் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைியல், நீண்ட கால குடும்ப நண்பரான கிரிட் பதியாவை மறுமணம் செய்ய அவரது தாயார் முடிவெடுத்தார். மகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் சம்மதிக்க காமினி காந்தி தனது 52வது வயதில் மறுமணம் செய்து கொண்டார்.
102 வயதில் தடகளப் போட்டியில் சாதனை… 100 மீட்டர் ஜஸ்ட் இத்தனை விநாடி தானா!
காமினி காந்திக்கும், அவர் விரும்பிய குடும்ப நண்பரான கிரிட் பதியவுக்கும் பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) அன்று மும்பையில் திருமணம் நடந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்-க்கு காந்தி அளித்த பேட்டியில், லாக் டவுன் காலத்தில்தான் அவர் அவர்கள் இருவரும் காதலித்தனர். ஒருவருக்கொருவர் பர்ஸபரம் உதவி செய்துகொள்கின்றனர். எனது தாயாருக்கு அவரை கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாகத் தெரியும். என்னை அணுகி திருமணம் குறித்து கேட்டபோது நான் முழு மனதுடன் சம்மதித்தேன். அவர்கள் இருவரும் காஷ்மீருக்கு தேனிலவு செல்ல உள்ளனர் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil