குஜராத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு கலாச்சார கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தனது கைகளில் இரண்டு வாள்களைக் சுழற்றியபடி நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. மத்திய அமைச்சர் நடனம் ஆடும் வீடியோ குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
குஜராத் மாநிலம், பவநகரில் ஸ்ரீ சுவாமி நாராயண குருகுலம் தொகுத்து வழங்கிய மகளிர் மேம்பாட்டு மன்றத் திட்டம் என்ற கலாச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார்.
#Gujarat के भावनगर में स्वामीनारायण गुरुकुल के प्रतिष्ठा महोत्सव में हिस्सा लेने आयी केंद्रीय मंत्री @smritiirani ने तलवार रास खेला pic.twitter.com/wocTmXC0BF
— News24 India (@news24tvchannel) November 15, 2019
நிகழ்ச்சியில் பெண்கள் நிகழ்த்திய பாரம்பரிய நடன கலை நிகழ்ச்சியின்போது, ‘தல்வார் ராஸ்’ என்ற பாரம்பரிய நடனத்தில் மேடையில் பெண் கலைஞர்களுடன் பங்கேற்பதற்காக நிகழ்வின் அமைப்பாளர்கள் அமேதி எம்.பி.யான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியைக் கேட்டுக்கொண்டனர். இது ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமாகும், இது குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பிரபலமாக உள்ளது. இதில் நடனமாடிய பெண்கள் தலைப்பாகையுடன் இரு கைகளிலும் வாள்களை சுழற்றியபடி நடனமாடினர்.
அவர்களின் அழைப்பை ஏற்று மேடை ஏறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது இரு கைகளிலும் வாள்களை சுழற்றி நடனமாடினார். இந்த நிகழ்சியின் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி உள்ளது. ஸ்மிருதி இரானியின் நடனத்தைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.