Viral News : “பிச்சை எடுக்க விரும்பவில்லை…” தள்ளாத வயதில் பேனா விற்கும் பாட்டி
பணத்தின் தேவைக்காக கீழ்மையான செயல்களை செய்யக் கூடாது என்று நமக்கும் எப்போதும் நம்முடைய பெற்றோர்கள் கூறுவது உண்டு. இந்த பாட்டி ஒரு வாழும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
Spirited elderly woman selling pens : எந்த சூழலிலும் பொய் சொல்லவோ, திருடவோ அல்லது பிச்சை எடுக்கவோ கூடாது. பணத்தின் தேவைக்காக கீழ்மையான செயல்களை செய்யக் கூடாது என்று நமக்கும் எப்போதும் நம்முடைய பெற்றோர்கள் கூறுவது உண்டு. இன்றைய சூழலில் சொகுசாக வாழ மேலே கூறிய அனைத்தையும் மக்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், தன்னுடைய முதுமையை கூட காரணம் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி ஒருவர் பேனா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
புனே எம்.ஜி. சாலையில் வயதான மூதாட்டி ரத்தன் கைகளில் நூற்றுக் கணக்கான பேனாக்கள் இருக்கிறது. அந்த சாலையில் வரும் நபர்களிடம் இந்த பேனாக்களை விற்பனை செய்து தன்னுடைய வாழ்வாதாரத்தை ஈட்டி வருகிறார். அந்த பேனாக்கள் அடங்கிய சிறிய அட்டைபெட்டியின் முகப்பில் “நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை. ஒரு பேனாவின் விலை ரூ. 10 மட்டுமே. அனைத்தும் நீல நிற பேனாக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து இன்ஸ்டகிராமில் sr1708 என்ற கணக்கு வைத்திருக்கும் நபர் அந்த பாட்டியின் புகைப்படத்தை பதிவு செய்து, தன்னுடைய நண்பனுடன் தானும் எம்.ஜி. ரோட்டிற்கு சென்ற போது இந்த பாட்டி பேனாக்களை விற்றார் என்றும், தன்னுடைய நண்பன் பேனாக்களை வாங்கிய போது, மேற்கொண்டு பேனாக்கள் வாங்குமாறு கூட அந்த பாட்டி வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil