Viral Video Update In Tamil : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு பொஙகல் பரிசு வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் பொங்கல் பண்டியை உலக தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த ஜனவரி 3-ந் தேதி பொங்கல் பரிசு பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசுப்பொருளை மக்கள் அனைவரும் மன மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்று பொங்கல் கொண்டாட தயராகி வருகினறனர்.
இந்நிலையில், திருத்தணி பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப்பொருளில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்ததாக நந்தன் என்பவர் நியாயவிலை கடையில் கேட்டுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் இது குறித்து எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில், நந்தன் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் நந்தன் தவறான புகார் அளித்துள்ளதாக கூறி அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்பட்ட.து.
இதனால் மனமுடைந்த நந்தன் மகன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொங்கல் பரிசுப்பொருளில்ல பல்லி இருந்தது குறித்து கடவுள் முருகனின் பாடல் ஒன்றுடன் இணைத்து வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. முருகனின் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை வெல்லம் உருகுதையா என்று மாற்றியமைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil