அரபிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காராணமாக இன்று தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நாளை (15/05/2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் , காரைக்கால் போன்ற பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.