twitter viral : தமிழ் சினிமாவில் தனது ஆகச் சிறந்த படைப்பால் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் தனி முத்திரை பதித்த இயக்குனர் சேரன், திருமணம் படத்திற்கு பிறகு சில மாற்றங்களுக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் இதெல்லாம் சேரனுக்கு தேவையா? பிக் பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன வேலை என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்த போது அதை தூக்கி எறிந்து விட்டு, கடைசியில் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் - க்கு மட்டுமில்லை பார்வையாளர்களுக்கும் மிகவும் பிடித்த போட்டியாளராக சேரன் மாறினார்.
பிக் பாஸ் வீட்டில் சேரனிடம் இருந்த நேர்மை, உண்மை குணங்கள், போராடும் நம்பிக்கை ஆகியவை மக்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமில்லை பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவை தனது சொந்த மகளாகவே சேரன் பாவித்து இருந்தார். லாஸ்லியாவுக்கு எல்லா நேரத்திலும் துணையாக நின்றார். தன்னுடைய விடாமுயற்சியாலும் நம்பிக்கையாளும் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் சேரன்.
சேரனுக்கு இரண்டு மகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சேரனின் இளைய மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்ற போது லாஸ் லியாவிடம் பேச வேண்டாம். அப்படி பேசினால் நீங்கள் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறி இருந்தார். இதற்கு முக்கிய காரணமே லாஸ்லியா பல முறை சேரன் விட்டு கொடுத்தால் தான்.
இருப்பினும் இறுதி வரை சேரன் லாஸ்லியாவை விட்டு கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சேரன் தனது மகளுடன் அணைத்து கவலைகளுடன் நிம்மதியாக உறங்கி கொண்டு அணைத்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.லாஸ்லியாவை சேரன் என்ன தான் சொந்த மகளாக பாவித்தாலும் சேரனின் நம்பிக்கை மற்றும் அன்புக்கு லாஸ்லியா சரியான பாத்திரம் இல்லை என்பதே உண்மை.
தனது சொந்த மகளுடன் சேரன் இருக்கும் இந்த புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களை குறிப்பதாகவும், சேரனின் மகளாக பிறந்ததற்கு தாமினி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.