1990களின் துவக்கத்தில் மிகப் பிரலமான பாடலான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான 'டேக் இட் ஈசி ஊர்வசி' என்ற பாடலை தெரியாத 90s கிட்ஸ்கலே இருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பாடலை கேட்டாலே ஆட தெரியாதவர்கள் கூட ஆட தொடங்கி விடுவார்கள்.
இப்போதுயெல்லாம் ஒரு பாடல் ரொம்ப ஃபேமஸ் ஆகிவிட்டால் அதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக்கில் ஷேர், யூடியூப்பில் ஃபேவரட் லிஸ்டில் வைத்து இளைஞர்கள் ரசிக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் ரேடியோ தான் ஃபேமஸ்.
1 மணி நேரத்திற்கு 1 முறை ஒலிப்பரப்பாகும் புத்தம் புதிய பாடல்கள் நிகழ்ச்சியில் இந்த பாடலை கேட்பதற்காகவே ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். சொல்லப்போனால் ஏ.ஆர் ரகுமானின் தேசியக் கீதமாகவே ஊர்வசி ஊர்வசி பாடலை சொல்வார்கள்.
அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டாலும் அவரிடம் நேயர் விருப்பமாக முதலில் கேட்கப்படும் பாடல் ஊர்வசி.. ஊர்வசி தான். ஆண்டுகள் கடந்தும் இந்த பாடல் மீதான காதல் ரசிகர்களிடம் குறையவில்லை.அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் கேரளாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள் ஊர்வசி ஊர்வசி பாடலை வாசித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
ஏ.ஆர் ரகுமானின் பாடலுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது போல் இவர்களின் இசை விருந்து அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.