Advertisment

”அம்மான்னா சும்மா இல்லடா....”: கண்களை கட்டிக்கொண்டு தங்கள் அம்மாக்களை கண்டுபிடிக்கும் மழலைகளின் 'ஃபீல் குட்' வீடியோ

அந்த குழந்தைகள், தங்கள் அம்மாக்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் போட்டி. இந்த வீடியோவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
”அம்மான்னா சும்மா இல்லடா....”: கண்களை கட்டிக்கொண்டு தங்கள் அம்மாக்களை கண்டுபிடிக்கும் மழலைகளின் 'ஃபீல் குட்' வீடியோ

நம்முடைய ’அம்மா’ எப்பொழுதுமே நமக்கு ஸ்பெஷல் தானே. ஒரு கூட்டத்தில் ஓராயிரம் பேர் திரண்டிருந்தாலும் நம்முடைய அம்மாவை கண்டுபிடித்து விடுவோம். அதிலும், குழந்தைகளுக்கு என்றால் சொல்லவா வேண்டும்?

Advertisment

குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்? குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் உள்ள உறவை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அது அவர்கள் இருவருக்குமே வாய்க்கப்பெற்ற வரம். இதோ, இந்த வீடியோவில் சின்ன சின்ன குழந்தைகளுக்கு கண்கள் கட்டி விடப்பட்டிருக்கின்றன. அவர்களின் அம்மாக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

அந்த குழந்தைகள், தங்கள் அம்மாக்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் போட்டி. இந்த வீடியோவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

எங்கே நம்முடைய குழந்தை நம்மை கண்டுபிடிக்காமல் விட்டுவிடுமோ என்ற அந்த தாய்மார்களின் பரிதவிப்பு ஒருபுறமும், கண்களை கட்டினாலும், தங்கள் அம்மாவை சரியாக கண்டுபிடித்து விட்டதும் குழந்தைகளின் அந்த மழலை சிரிப்பும் செம்ம! குழந்தை சரியாக கண்டுபிடித்து விட்டதும் அந்த அம்மாக்களின் கண்களில் ஆனந்த கண்ணீர். உடனேயே குழந்தையை அணைத்து உச்சி முகர்கிறார்கள். மனதை லேசாக்குகிறது இந்த வீடியோ.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment