உணவு வேட்டையில் இரை வைக்கும் பழக்கத்தை மனிதர்கள் தங்களின் பரிணாம வளர்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் காடுகளில் வேட்டையாடினார்கள். ஆனால் காலங்கள் மாற மாற தற்போது மீன்களை பிடித்தலோடு நின்றுவிட்டது. மனிதர்களைப் போன்றே நாரையும் இரை வைத்து மீனை பிடிக்கிறது.
Advertisment
நாரை மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட பறவைகள் தங்களுக்கான மீனை உணவாக பிடிக்க இரையை பயன்படுத்துகிறது என்று கூறுகிறார் இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தெரிவித்துள்ளார்.
அவர் பதிவு செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாம்பல் நிற நாரை ஒன்று நீர் நிலையம் ஒன்றில் நின்று கொண்டு முதலில் இரை ஒன்றை போடுகிறது. ஆனால் அதனை மீன் சாப்பிடவில்லை. பிறகு அதே இரையை எடுத்து மற்றொரு பக்கம் போட்டுவிட்டு மீன் அதனை உண்ண வரும் வரை காத்திருக்கிறது. மீன் அதற்கான இரையை நெருங்கும் போது அதனை அல்லேக்காக தூக்கி வாயில் போட்டு தின்றுவிடுகிறது அந்த நாரை.
8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். நாரைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு இதற்கு முன்பு தெரியுமா என்பதையும், இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்தையும் எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil