உக்ரைன் நாட்டு குழந்தைகளுடன் விளையாடும் ஸ்லோவாக் காவல்துறையினர்; வைரலாகும் வீடியோ
சமூக வலைதளங்களில் போர் சூழல் குறித்து பரவும் செய்திகள் அச்சமடைய வைத்தாலும் கூட மனிதத்தை பிரதிபலிக்கும் சம்பவங்கள் நெஞ்சோடு ஒட்டிக் கொள்ளும். அப்படித்தான் அமைந்துள்ளது இந்த வீடியோவும், அகதிகளாக ஸ்லோவாக் நாட்டில் தஞ்சம் புகுந்த ஒரு பெண்ணின் இரண்டு குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடும் காவல்துறையினரும்.
இன்று உலக நாடுகளின் கவனம் முழுவதும் ரஷ்யா - உக்ரைன் போர் மீது தான் இருக்கிறது. நான்காவது வாரமாக நீடிக்கும் போரால் உலக நாடுகளில் ஏற்பட்டு பொருளாதார பின்னடைவுகள், கொரோனாவுக்கு பிந்தைய காலத்தை மேலும் சவால் மிக்கதாக மாற்றியுள்ளது. ஆயிர கணக்கான மக்கள் கிழக்கு உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களுக்கு போலாந்து, ஸ்லோவாக் உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. முன்னாள் சோவியத் நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர் மக்கள்.
Advertisment
போர் காலத்தில் பூக்கும் பூக்களுக்கு ரத்தத்தின் வாசமும் தெரியும், அமைதியின் தேவை என்ன என்பதும் புரியும் என்பது போன்று தான் ஆங்காங்கே நிகழும் ஒரு சில சம்பவங்கள் நெகிழ்ச்சி ஏற்படுத்துகின்றன.
சமூக வலைதளங்களில் போர் சூழல் குறித்து பரவும் செய்திகள் அச்சமடைய வைத்தாலும் கூட மனிதத்தை பிரதிபலிக்கும் சம்பவங்கள் நெஞ்சோடு ஒட்டிக் கொள்ளும். அப்படித்தான் அமைந்துள்ளது இந்த வீடியோவும், அகதிகளாக ஸ்லோவாக் நாட்டில் தஞ்சம் புகுந்த ஒரு பெண்ணின் இரண்டு குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடும் காவல்துறையினரும்.
ஒரு நிமிடம் வரை ஓடும் அந்த வீடியோவில் இரண்டு காவல்துறையினர், ஒரு பெண்மணி அருகே நின்று அவரின் இரண்டு குழந்தைகளுடன் விளையாடி வருகின்றனர். ஒருவர் தன்னுடைய இடுப்பில் குழந்தை ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு விளையாட மற்றொரு காவலரும், குழந்தையும் அவருடைய கையில் இருக்கும் பொம்பையை பிடிக்க விரட்டிச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ, இன்று உங்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கும் என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil