மருத்துவ குணம் ஏராளம்... இந்தக் காயில் கொஞ்சம் கூட்டு!

தேவையான பொருட்கள்

அதலக்காய் 200 கிராம், புளி 150 கிராம், நல்லெண்ணெய் 250 மில்லி, சின்ன வெங்காயம் 200 கிராம், பூண்டு உரித்தது 100 கிராம், பச்சை வேர்க்கடலை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி தழை சிறிதளவு, பெருங்காயம் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, குழம்பு மிளகாய் தூள் தேவைக்கு ஏற்ப, மஞ்சள்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி ஒரு டீஸ்பூன், வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை சிறிது அளவு, கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தலா ஒரு டீஸ்பூன் தாளிப்பதற்கு.

சின்ன வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அதலக்காயின் முனையை நீக்கி சுத்தம் செய்து, சிறிது எண்ணெயில் மிதமான தீயில் வதக்கி வைத்துக்கொள்ளவும் (வெடிக்கும் தன்மை உள்ளதால் கவனம் தேவை).

புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயத்தை தாளித்து, பூண்டு, வெங்காயம், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய அதலக்காயும் சேர்க்கவும்.

அரைத்த தக்காளி கூழ், புளிக் கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்.

வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மீதமுள்ள எண்ணெய் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வெந்துக்கொடுக்கவும். உப்பு மற்றும் சிறிது வெல்லம்/சர்க்கரையும் சேர்க்கலாம்.

சேமிப்பு மற்றும் பரிமாற்றம்

குழம்பு ஆறியதும் ஏர்டெய்ட் கன்டைனர்-ல் போட்டு வைத்துக் கொள்ளலாம். 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். சூடான சாதத்துடன் அல்லது தோசையுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்

மேலும் அறிய