நிம்மதி தூக்கம் முதல் நல்ல செரிமானம் வரை... ஜாதிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க!

நல்ல தூக்கம் கிடைக்கும்

ஜாதிக்காய் உடலை தளர்த்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனையின்றி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஜாதிக்காய் நீர் செரிமான அமைப்பை வலுப்படுத்தி, அமிலத்தன்மை, மலச்சிக்கல், வாயு போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி சளி, இருமல் போன்ற பருவகால நோய்களைத் தடுக்கிறது.

சரும ஆரோக்கியம் மேம்படும்

ஜாதிக்காய் நீர் சருமத்தை உள்ளிருந்து ஊட்டம் அளித்து சுத்தப்படுத்துவதால் முகப்பரு குறையும் மற்றும் சருமம் பளபளக்கும்.

எடை குறைய உதவும்

இதில் உள்ள இயற்கை பண்புகள் கொழுப்பை எரித்து, நச்சுகளை அகற்றி உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

ஜாதிக்காய் நீர் இரத்தத்தை சுத்தப்படுத்தி கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

மனஅழுத்தம் குறையும்

இது மனதை அமைதியாக வைத்திருப்பதால் மனஅழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுதலை பெற உதவுகிறது.

எளிய செய்முறை

ஒரு கிளாஸ் கொதித்த நீரில் கால் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து ஆறவைத்து வடிகட்டி குடிக்கலாம்.

விருப்பப்படி சுவை சேர்க்கலாம்

தேவைப்பட்டால் தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து ஜாதிக்காய் நீரின் சுவையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கலாம்.

மேலும் அறிய