இன்ஸ்டன்ட் பூரி... அதுவும் இட்லி பாத்திரத்தில்!

எண்ணெய் இல்லாமல் பூரி

பூரி சுவையான உணவாக இருந்தாலும், எண்ணெயில் பொறிப்பதால் சிலருக்கு சாப்பிட முடியாது. இப்போது, எண்ணெய் இல்லாமல் பூரி செய்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

இப்படி செய்தால் ஒரு சொட்டு எண்ணெய் கூட பயன்படாது

தேவைப்பட்டால் பூரி தயாரான பிறகு நெய்யை சுவைக்காக பயன்படுத்தலாம்.

0% எண்ணெய் இல்லாத பூரி செய்வது எப்படி..?

பூரிக்கு வழக்கம் போல் மாவை பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக மாறியதும், சிறிய உருண்டைகளாக செய்து உருட்டிக்கொள்ளுங்கள்.

பின் பூரிக்கு திரட்டுவது போல் வட்டமான திரட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் இட்லி தட்டுகளை வையுங்கள்

கடைசி மேல் அடுக்கில் 4 திரட்டிய பூரி மாவை வையுங்கள்.

இட்லி தட்டு போட்டு மூடி 7 முதல் 8 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்

வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு போக ஆற வையுங்கள்.

அதை ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு வைத்தால் வீட்டிற்கு யாராவது வரும் பொது உடனடியாக பூரி செய்து விடலாம்.

மேலும் அறிய